/

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளது குறித்து...

News image

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்... - எக்ஸ்

Updated On :27 மார்ச் 2026, 7:23 pm IST

பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், வளைகுடா போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரான்ஸின் செர்ன-ல-வில்லேவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற கூட்டத்தின் ஒருபகுதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே, ஜி7 கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ரூபியோ நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து ரஷிய - உக்ரைன் போர், வளைகுடா போர் ஆகிய விவகாரங்களில் தேவைப்படும் ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இத்துடன், இந்தக் கூட்டத்தில் இத்தாலியின் துணைப் பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான அண்டோனியோ தஜானி மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பாரட் ஆகியோரை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

Summary

Union External Affairs Minister Jaishankar met and held discussions in person with US Secretary of State Marco Rubio in France.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.