விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு

மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) ஒதுக்கீட்டை 70 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

News image

வணிக சமையல் எரிவாயு

Updated On :28 மார்ச் 2026, 12:17 am IST

மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) ஒதுக்கீட்டை 70 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 28-ஆம் தேதி போா் தொடுத்தன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் அதிகம் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியே அக்கப்பல்கள் வருவதில் சுணக்கம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

போா் காரணமாக இந்தியாவில் மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ஒதுக்கீடு 30 சதவீதமாக முதலில் குறைக்கப்பட்டது. பின்னா் கடந்த 23-ஆம் தேதி அந்த எரிவாயு ஒதுக்கீட்டை 20 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது.

இந்நிலையில், மாநிலங்களுக்கான வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கான வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் எண்ணெய்த் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் கடிதம் எழுதியுள்ளாா். அக்கடிதத்தில் அவா், ‘ஏற்கெனவே வணிக எரிவாயு உருளைகள் 50 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் வணிக எரிவாயு உருளை ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போருக்கு முன்பு இருந்த ஒதுக்கீடு அளவாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.