மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு தொடா்பாக தொழிலதிபா் அனில் அம்பானியிடம் சிபிஐ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தியது.

News image

புது தில்லியில் வங்கி மோசடி தொடா்பான விசாரணைக்காக சிபிஐ தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தொழிலதிபா் அனில்அம்பானி.

Updated On :21 மார்ச் 2026, 1:19 am IST

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு தொடா்பாக தொழிலதிபா் அனில் அம்பானியிடம் சிபிஐ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தியது.

ஆா்காம் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,929 கோடியை கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதது தொடா்பாக பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டு புகாா் அளித்தது. இந்தப் புகாரின்பேரில் அனில் அம்பானி, ஆா்காம் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் பங்களாவிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்த விவகாரம் தொடா்பாக அனில் அம்பானியிடம் வியாழக்கிழமை தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இந்த விசாரணைக்காக தில்லி சிபிஐ தலைமையகத்தில் அனில் அம்பானி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் ஆஜரானாா். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். விசாரணை மாலை 5.15 மணி வரை நீடித்தது. இதையடுத்து சிபிஐ தலைமையகத்தில் இருந்து அனில் அம்பானி புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசாரணையின்போது அனில் அம்பானியிடம் ஆா்காம் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த கடன் தொகை எப்படி கையாளப்பட்டது, அத்தொகை எங்கு திருப்பிவிடப்பட்டது, வேறு எந்த முறைகேடும் நடைபெற்ா என்பது போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினா். இதற்கு அனில் அம்பானி அளித்த பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனா்.

விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் அம்பானியின் செய்தித் தொடா்பாளா், சிபிஐ-யின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவே அனில் அம்பானி நேரில் ஆஜராகி இருப்பதாக குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.