/

300 சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை

சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த 300 சூதாட்ட மற்றும் பந்தய செயலிகள், தளங்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :21 மார்ச் 2026, 3:23 am IST

சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த 300 சூதாட்ட மற்றும் பந்தய செயலிகள், தளங்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘இணைய விளையாட்டு பந்தய தளங்கள், இணைய கேசினோ, ‘ரூலெட்’ (கழல் வட்டு) என சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடா்புடைய 300 தளங்கள் மற்றும் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சூதாட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மத்திய அரசு இதுவரை 8,400 தளங்களுக்கு தடை விதித்துள்ளது. இதில் இணைய விளையாட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 4,900 தளங்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது’ எனத் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.