லக்னௌவின் காஜியாபாத்தில் உள்ள ஒரு வங்கியில் விடுப்பு, சம்பளம் தொடர்பான பிரச்னைகளால் வங்கி மேலாளரை பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக லோனி எல்லைப் பகுதி காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில்,
லோனி கிளையின் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வருபவர் 34 வயது அபிஷேக் குமார். இவர் பாட்னாவைச் சேர்ந்தவர்.
2025 முதல் காஜியாபாத்தில் உள்ள வங்கியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதே வங்கியில் பாதுகாப்பு ஊழியராக ரவீந்திர ஹூடா (50), அவருக்குத் துணையாக ஷிஷுபால் (57) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டரை மாதங்களாக ரவீந்திர ஹூடாவுக்கு விடுப்பு கேட்டபோதெல்லாம் மறுக்கப்பட்டதாகவும், சம்பளம் குறைக்கப்படதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவருக்கும் வங்கி மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாதுகாவலர் ரவீந்திர ஹூடா வங்கி மேலாளரைத் தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவம் நடந்தபோது ஷிஷுபால் அவருடன் இருந்துள்ளார்.
இதையடுத்து, காயமடைந்த வங்கி மேலாளர் சிகிச்சைக்காகத் தில்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாவலர்கள் ரவீந்திர ஹூடா மற்றும் ஷிஷுபால் ஆகிய இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் பாக்வத் மாவட்டத்தில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
A security guard of a Ghaziabad bank upset over leave and salary related issues walked into the manager's cabin and shot him dead, police said on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜிஎஸ்டி பவனில் தீ விபத்து

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!
வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

