மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாகாலாந்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு!

நாகாலாந்தின் ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்றுள்ளது குறித்து...

News image

நாகாலாந்தின் ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு... - எக்ஸ்/Bihar BJP

Updated On :13 மார்ச் 2026, 3:51 pm IST

நாகாலாந்து மாநிலத்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்றுள்ளார்.

நாகாலாந்தின் 23 ஆவது ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, குவாஹட்டி உயர்நீதிமன்ற நீதிபதி அஷுதோஷ் குமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஷாரின்கையின் லோங்குமர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நாகாலாந்தின் முன்னாள் ஆளுநர் இல.கணேசன் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் காலமானார். பின்னர், மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்தின் ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார்.

இதையடுத்து, பிகாரைச் சேர்ந்தவரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அஷுதோஷ் குமார் முதல்வர் நிதீஷ் குமார் அரசின் சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்து வந்துள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இடமாற்றம் செய்தவுடன் நாகாலாந்தின் புதிய ஆளுநராக அஷுதோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Nand Kishore Yadav has been sworn in as the new Governor of Nagaland.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.