நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க் கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிப்பது குறித்து...

News image

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க் கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார். இந்த பயணத்தின்போது கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிற நிகழ்ச்சியில் 3 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

கொல்கத்தாவில் நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துனாகிரி, சன்ஷோதாக், அக்ராய் ஆகிய 3 போர்க் கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த 3 கப்பல்களும், கடல்சார் போர், நீரியல் அளவீடு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் ஆகிய துறைகளில் உள்ள ஈடுபடுத்தப்படும்.

Summary

PM Modi to commission 3 naval ships at Syama Prasad Mookerjee Port

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.