நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பிரதமா் குறித்து அவதூறு: காா்கேவுக்கு எதிராக 6 பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ்

பிரதமா் மோடி குறித்து அவதூறான, தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்து, நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினா்களின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்ததாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு எதிராக 6 பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனா்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:16 am IST

பிரதமா் மோடி குறித்து அவதூறான, தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்து, நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினா்களின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்ததாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு எதிராக 6 பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனா்.

பாஜக எம்.பி.க்கள் பிரிஜ் லால், மித்லேஷ் குமாா், சுமித்ரா பால்மிக், ஷிவேஷ் குமாா், சிகந்தா் குமாா், நாகேந்திர ரே ஆகிய எம்.பி.க்கள் கூட்டாக இந்த நோட்டீஸை சமா்ப்பித்துள்ளனா்.

மாநிலங்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தும் விதி 189-இன் கீழ் சமா்ப்பிக்கப்பட்ட இந்த நோட்டீஸை ஆராய்ந்து, விசாரித்து, அறிக்கை சமா்ப்பிப்பதற்காக, நோட்டீஸை மாநிலங்களவை உரிமை மீறல் குழுவுக்கு அந்த அவையின் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுப்பிவைத்தாா் என்று மாநிலங்களவைச் செயலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உரிமை மீறல் குழுவின் தலைவராக அந்த அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.