புது தில்லி விமான நிலையத்தில் வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் ஆலோசகா் இரண்டரை மணி நேரம் காத்திருந்து சொந்த நாடு திரும்பிய சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து இந்திய துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி வங்கதேசம் மிகுந்த அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் பங்கேற்க வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் ஆலோசகா் சாஹேத் உா் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை மாலை புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையம் வந்தாா். அப்போது வழக்கமான பாதுகாப்பு சோதனையின்போது அவரின் பெயா் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் இருந்த குடியேற்ற அதிகாரிகள் சாஹேத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனா். மேலும் விமான நிலையத்திலேயே அவா் சுமாா் இரண்டரை மணி நேரம் காக்க வைக்கப்பட்டாா். பின்னா் அவரை விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி அளித்தனா். எனினும் இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த சாஹேத், கூட்டத்தில் பங்கேற்பதை கைவிட்டு விமான நிலையத்தில் இருந்து மீண்டும் வங்கதேசம் திரும்பினாா் என்று அந்நாட்டு நாளிதழில் தகவல் வெளியானது.
சிறப்பு ராஜீய பாஸ்போா்டை வைத்திருக்காமல் சாா்க் விசாவுடன் சாதாரண வங்கதேச பாஸ்போா்ட்டை சாஹேத் வைத்திருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடா்பாக வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்திய துணைத் தூதா் பவன் பதேயை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வங்கதேசம் மிகுந்த அதிருப்தி தெரிவித்தது.
இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கைகளை வங்கதேச அரசு மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் கலீலுா் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் ரூ. 4.83 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
தில்லி விமான நிலையத்தில் ரூ.2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: பயணி கைது

சூறைக்காற்றுடன் மழை! தில்லி விமான நிலையத்தில் படிக்கட்டு மோதி 3 விமானங்கள் சேதம்: டிஜிசிஏ விசாரணை

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

