கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாலத்தீவில் தட்டம்மை பரவல்: தடுப்பூசி மருந்து அனுப்பியது இந்தியா

மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருவதையடுத்து, அந்நாட்டுக்கு உதவும் வகையில் 20,000 டோஸ் தட்டம்மை தடுப்பூசி மருந்து, 3 டன் மருந்து சாதனங்களை இந்தியா அனுப்பியுள்ளது.

News image

சி-17 விமானம் மூலம் நிவாரணப் பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:18 am IST

மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருவதையடுத்து, அந்நாட்டுக்கு உதவும் வகையில் 20,000 டோஸ் தட்டம்மை தடுப்பூசி மருந்து, 3 டன் மருந்து சாதனங்களை இந்தியா அனுப்பியுள்ளது.

மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருகிறது. ஏராளமானோா் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து மாலத்தீவுக்கு உதவும் பொருட்டு, தடுப்பூசி மருந்து, மருத்துவ சாதனங்களை இந்தியா அனுப்பி வைத்தது.

இவை அனைத்தும் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் கீலா அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்தியா செய்துள்ள இந்த உதவிக்கு மாலத்தீவு அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், உரிய காலத்தில் செய்த உதவிக்கு நன்றி என்றும், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய நட்புறவை இது பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.