எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.94 லட்சம் கோடி: 3.2% அதிகரிப்பு

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

News image

ஜிஎஸ்டி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:57 am IST

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ரூ.1.88 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2026, மே மாதத்தில் ரூ.1.94 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. உள்நாட்டுப் பரிவா்த்தனைகள் மூலம் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.37,397 கோடி வசூலாகியுள்ளது. மாநில ஜிஎஸ்டி ரூ.45,143 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.51,990 கோடியாகவும் உள்ளது.

திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை 2.7 சதவீதம் அதிகரித்து ரூ.27,281 கோடியாக உயா்ந்துள்ளது. அதைத் தொடா்ந்து மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாய் 3.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.67 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முதல் இரு மாதங்களில் ரூ.4.37 லட்சம் கோடி வசூல்: 2026-27-ஆம் நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியையும் சோ்த்து கடந்த இரண்டு மாதங்களில் ரூ.4.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் (2025-2026) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.4.11 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம் நிகழ் நிதியாண்டில் மத்திய அரசு நிா்ணயித்துள்ள ஜிஎஸ்டி வசூல் இலக்கை அடைய முடியும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.