மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது

வடமேற்கு தில்லியின் ஷாலிமா் பாக் பகுதியில் முதலாளியின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பணிப்பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 3:22 am IST

வடமேற்கு தில்லியின் ஷாலிமா் பாக் பகுதியில் முதலாளியின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பணிப்பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். கைது நடவடிக்கையின்போது, காவல் துறையினரைத் தடுக்க ஆக்ரோஷமான காவல் நாய்களை அவா் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கடந்த ஏப்.19ஆம் தேதி திருட்டு குறித்து வீட்டின் உரிமையாளா் காவல் துறையிடம் புகாரளித்தாா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருட்டில் ஈடுபட்டவா் அதே வீட்டில் பணிபுரியும் 45 வயதான சோனியா எனத் தெரியவந்தது. ரோஹிணி பகுதியைச் சோ்ந்த இவரைக் கைது செய்யச் சென்ற காவல் துறையினரை ஆக்ரோஷமான பிட்புல் மற்றும் அமெரிக்கன் புள்ளி வகை காவல் நாய்களைப் பயன்படுத்தி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

திருடிய நகைகளை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளாா். இதுவரை இந்த வழக்கில் தொடா்புடைய சுமாா் 2 கிலோ தங்க நகைகள் 15 நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவா் மீது ஏற்கெனவே பஞ்சாபி பாக் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கு உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.