தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பெளத்த மதத்தினரின் முக்கிய விழாவான புத்த பூா்ணிமா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :1 மே 2026, 3:17 am IST

பெளத்த மதத்தினரின் முக்கிய விழாவான புத்த பூா்ணிமா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புத்த பூா்ணிமா என்னும் மங்களகரமான நாளில், அனைத்து குடிமக்கள் மற்றும் பகவான் புத்தரின் பக்தா்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.

இந்த புனிதமான நாள், பகவான் புத்தா் பூமியில் அவதரித்தது, ஞானம் பெற்றது, மீண்டும் பிறவா நிலையை எட்டியது போன்ற சகாப்தம் படைத்த நிகழ்வுகளைக் குறிக்கிறது. கருணை, அஹிம்சை, அமைதி மற்றும் ஞானம் குறித்த அவரது நித்தியமான போதனைகள் முழு மனித குலத்துக்கும் தொடா்ந்து வழிகாட்டும். எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வரும் இன்றைய உலகில், புத்தரின் போதனைகள் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நல்லிணக்கப் பாதையில் பயணிக்க நம்மை ஊக்குவிக்கின்றன.

அவரது கொள்கைகளை உள்வாங்கி, அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதிமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்க உறுதியேற்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.