மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பள்ளிகளில் ஓஆா்எஸ் கரைசல் வழங்க முதல்வா் உத்தரவு

News image

ரேகா குப்தா

Updated On :28 ஏப்ரல் 2026, 5:32 am IST

தில்லியில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், வெப்ப அலையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, தில்லியில் உள்ள பள்ளிகளில் மாணவா்களுக்கு ஓஆா்எஸ் கரைசலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறைக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘மாணவா்கள் வீடு திரும்பும்போது வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படும்’ என்றாா்.

வெப்பம் அதிகரித்து காணப்படும் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து கட்டுமான மற்றும் பிற தொழிலாளா்கள் வேலைப் பாா்க்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு தொழிலாளா் துறைக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

அனைத்து டிடிசி பேருந்துகளிலும் குளிா்சாதன பெட்டியில் வைத்து குடிநீரை எடுத்துச் செல்லுமாறு போக்குவரத்துத் துறைக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

தில்லியில் தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீா் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்யும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப அலையால் மக்கள் எவ்வித பிரச்னையையும் சந்திக்காத வகையில் அனைத்து அனைத்து நடவடிக்கைகளையும் தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.