மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக பாஜகவை மக்கள் பழி வாங்குவர் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், "இந்தத் தேர்தலில் போட்டியிடும் மமதா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகள். இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடும் மேற்கு வங்க மக்களுக்கும் எனது வாழ்த்துகள்.
கடந்த 2 நாள்களில் மாநிலத்தில் நடந்தவற்றையெல்லாம் பார்க்கும்போது, மாநிலத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக மக்கள் பழி வாங்குவார்கள் என்று தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டியில் நிலவிவரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பேசியுள்ளார்.
முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கடும் முயற்சிகளை செய்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கான தேர்தல் புதன்கிழமையில் (ஏப். 29) நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, மாநிலத்தின் சாதனை அளவாக முதற்கட்டத் தேர்தலில் 93.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதற்கட்டத் தேர்தலைவிட 2ஆம் கட்டத் தேர்தல்தான் மிக முக்கியம், ஏனெனில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகள் பலவும் மமதா பானர்ஜியின் கோட்டையாக விளங்குபவை.
Summary
People of Bengal will take revenge for cutting 90 lakh votes, says AAP National Convenor Arvind Kejriwal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மேற்கு வங்க ‘அம்மா உணவகத்தில்’ சாப்பிட பிரதமருக்கு திரிணமூல் அழைப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

