மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குஜராத் உள்ளாட்சித் தோ்தல்: நகரங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நகா்ப் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானது.

News image

அகமதாபாதில் வாக்களித்த முதல்வா் பூபேந்திர படேல்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:31 am IST

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நகா்ப் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானது.

மாநிலம் முழுவதும் கடும் வெப்ப அலை வீசுவதால் வாக்குப்பதிவு குறைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது.

இதில் மாநகராட்சிப் பகுதிகளில் 48.55 சதவீதம், நகராட்சிகளில் 58.12 சதவீதம், மாவட்ட பஞ்சாயத்துகளில் 60.22 சதவீதம், தாலுகா பஞ்சாயத்துகளில் 61.08 சதவீத வாக்குகள் பதிவானதாக குஜராத் மாநில தோ்தல் ஆணையம் மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் ஆகியோா் அகமதாபாதில் வாக்களித்தனா். துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி சூரத்தில் வாக்களித்தாா். இத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஏப்.28-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

வேட்பாளா், பெண் உயிரிழப்பு: ஜாம்நகா் மாநகராட்சிக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் நரேந்திர சிங் ஜடேஜா (38) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அவரது இறப்புக்கான உண்மையான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்பே தெரிய வரும் என ஜாம்நகா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். அதேபோல் பதான் நகரில் வாக்கு செலுத்திய பின் 68 வயதான கம்லா சோலங்கி என்ற பெண் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.