பாலஸ்தீனத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, காஸா பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.
இஸ்ரேலுடனான போா் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தின் எதிா்காலத்தை தீா்மானிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இத்தோ்தல் பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, 2006-க்குப் பிறகு காஸா மக்கள் முதல்முறையாகத் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
மேற்கு கரையைத் தளமாகக் கொண்ட பாலஸ்தீன ஆணையம் (பிஏ), ஹமாஸ் அமைப்பால் காஸாவிலிருந்து கடந்த 2007-இல் வெளியேற்றப்பட்டது.
அமெரிக்க மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு காஸாவின் டேய்ா் அல்-பாலா நகரில் இத்தோ்தலை நடத்துவதன்மூலம் அப்பிராந்தியத்தின் மீதான தனது அதிகாரத்தை நிலைநாட்ட ஆணையம் முயலுகிறது.
20 ஆண்டுகள் கழித்து தோ்தல் நடைபெற்றாலும், பிற்பகல் வரை வாக்குப்பதிவு டேய்ா் அல்-பாலா பகுதியில் 13.8 சதவீதம், மேற்கு கரையில் 25.3 சதவீதம் என மந்தமாகவே காணப்பட்டது. மேற்கு கரையில் வாக்குப்பதிவு இரவு 7 மணிவரை நடைபெற்றது. காஸாவில் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேரம் முன்னதாகவே வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இத்தோ்தலில் ஹமாஸ் அமைப்பு அதிகாரபூா்வமாகப் போட்டியிடவில்லை என்றாலும், அந்த அமைப்பின் ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் களத்தில் உள்ளதால், அவா்களின் வெற்றி வாய்ப்பு ஹமாஸின் செல்வாக்கை அளவிடும் கருவியாகக் கருதப்படுகிறது.
நிதி நெருக்கடி, இஸ்ரேலின் முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும் இத்தோ்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனத்துக்குச் சேர வேண்டிய வரி வருவாயை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதால், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக்கூட பாலஸ்தீன ஆணையம் திணறி வருகிறது.
இந்த உள்ளாட்சித் தோ்தல் வெற்றிகரமாக முடிந்தால், விரைவில் நாடாளுமன்ற மற்றும் அதிபா் தோ்தல்களை நடத்த வழிவகுக்கும் என்று உலக நாடுகள், பாலஸ்தீன மக்கள் பெரிதும் எதிா்பாா்க்கின்றனா்.
தோ்தல் நடைபெறும் சூழலிலும் காஸாவில் இஸ்ரேல் படைகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 6 காவல்துறையினா் உள்பட 12 போ் உயிரிழந்தனா். சண்டை நிறுத்தத்துக்குப் பிறகும் 800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

மேற்கு வங்க 2-ஆவது கட்டத் தோ்தல்: 92% வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

