தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி மீதான எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, "மக்களவையில் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி கட்சிகள் அனுமதிக்கவில்லை.
பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் தோல்வியைக் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது.
இப்போது, பெண்களுக்கு அவைகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்காது. காங்கிரஸும் அதன் கூட்டணிகளும்தான் இதனைச் செய்துள்ளனர். இது முதல்முறை அல்ல; மீண்டும் மீண்டும் அவர்கள் இதனைச் செய்கின்றனர்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மனநிலையானது, பெண்களின் நலனுக்கானதோ நாட்டின் நலனுக்கானதோ அல்ல" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா விவாதத்தின்போது அமித் ஷா பேசுகையில், "தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தமிழகத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்கள் மகளிருக்கானதாக இருக்கும். தென் மாநிலங்களுக்கான பங்கீடு குறையாது என நான் உறுதியளிக்கிறேன். உங்களால் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம். ஆனால், அதனை மகளிர் மன்னிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை சதவிகிதம் குறையாது. தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என கையெழுத்திட்டு தருகிறேன்.
தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க நான் தயாராக இருக்கிறேன், இன்ற இந்த மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
Summary
Celebrating defeat of bill to grant 33 pc reservation to women reprehensible, says Union Minister Amit Shah
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
