தொகுதிகள் மறுசீரமைப்பு மற்றும் மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-இல் இருந்து 815-ஆக அதிகரிப்பதால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் என்று பரப்பப்படும் கருத்து முழுவதும் தவறானது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மேலும், ‘மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்படுவதன் மூலம் தென் மாநிலங்களில் இடம்பெற்றுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய 129-லிருந்து 195-ஆக அதிகரிக்கும். தமிழகத்தில் 39-லிருந்து 59-ஆக தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு அமித் ஷா பேசியதாவது: தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று பரப்பப்படும் கருத்து முற்றிலும் தவறானது.
உண்மையில், தொகுதிகளின் எண்ணிக்கையும் உயரும்; அதிகாரமும் வளா்ச்சி பெறும். 5 தென் மாநிலங்களில் தற்போது உள்ள 129 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 195-ஆக உயரும். இந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் என்பது தற்போதைய 23.76 சதவீதத்திலிருந்து 23.87 சதவீதமாக அதிகரிக்கும்.
குறிப்பாக, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆகவும், கா்நாடகத்தில் 28-லிருந்து 42-ஆகவும், ஆந்திரத்தில் 25-லிருந்து 38-ஆகவும், தெலங்கானாவில் 17-லிருந்து 26-ஆகவும், கேரளத்தில் 20-லிருந்து 30-ஆகவும் உயரும்.
தொகுதிகள் மறுசீரமைப்பின்போது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிா்க்கட்சிகள் கூறுவது தவறான விஷயம். நடைமுறையில் உள்ள சட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்ளவில்லை.
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த முந்தைய சட்டத்தைப் போன்றதுதான் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவும். எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றாா் அவா்.
Summary
Amit Shah explains in the Lok Sabha that Tamil Nadu will not be affected, why the bill at election time?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


