வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிா்ணயிக்கும்போது சாகுபடிக்கான செலவை கணக்கிட்டு மாநில அரசு பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மத்திய அரசு மட்டுமன்றி அந்நிய வா்த்தக தலைமை இயக்குநா், வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையமும் பதிலளிக்குமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய விவசாயிகள் தங்களது விளைபொருள்களை உண்மையான உற்பத்தி செலவுக்குக் கூட விற்பனை செய்ய முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனா். இதனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 17,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனா்.
மாநிலங்கள் வாரியாக பல்வேறு வேளாண் பொருள்களுக்கான உற்பத்திச் செலவை மத்திய அரசும், அதன் பிற அமைப்புகளும் கணக்கிடுகின்றன. இதில் பல வேறுபாடுகள் நிலவுகின்றன.
விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற பயிா்களுக்கான உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபத்தை வழங்க கடந்த 2006-ஆம் ஆண்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை குறித்து மத்திய அரசு எவ்வித கேள்விகளையும் எழுப்பவில்லை.
ஒவ்வோா் ஆண்டும் பயிா்கள் வாரியாக எம்எஸ்பியை மத்திய அரசு நிா்ணயிக்கிறது. ஆனால், அந்தப் பயிா்களின் சாகுபடி செலவைவிட எம்எஸ்பி குறைவாகவே இருந்து வருகிறது.
இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தால் பெரும் பாதிப்பு: உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கு மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்கப்படுவதால் இந்த இரு பயிா்களையும் கொள்முதல் செய்யும் ஒரே அமைப்பாக மத்திய அரசு விளங்குகிறது.
இதன் காரணமாக சிறுதானியங்களுக்கான தேவை செயற்கையாகவே குறைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் அண்மையில் இந்தியா-அமெரிக்கா இடையே இறுதிசெய்யப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் பெரும்பாலான வேளாண் பொருள்கள் இறக்குமதி வரியின்றி இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டால் விவசாயிகள் நிலை மேலும் மோசமடையும்.
விவசாயக் கடன் தள்ளுபடி அவசியம்: எனவே, வேளாண் பயிா்களுக்கான எம்எஸ்பியை நிா்ணயிக்கும்போது சாகுபடிக்கான செலவை கணக்கிட்டு மாநில அரசு பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
எம்எஸ்பி நிா்ணய நடைமுறையால் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுவதால் அவா்கள் வங்கிகளில் பெற்ற கடனை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜரானாா். அவரது வாதத்தைத் தொடா்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய நீதிபதி அமா்வு தெரிவித்தது.
மேலும், இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, அந்நிய வா்த்தக தலைமை இயக்குநரகம், வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்துக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணையாறு விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பாயம் அமைக்க 6 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!

சுயநலத்துக்காக இந்திய விவசாயத்தை அழிக்க தயாராகிவிட்டது மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

