தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் தொடா்பான தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:36 am IST

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் தொடா்பான தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு பிறகு, மேற்கு வங்கத்தில் வெளியான வாக்காளா் பட்டியலில் இருந்து, பாஜக தூண்டுதலால் 90 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் 9-ஆம் தேதி முடக்கியுள்ளதாகவும், இதனால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டோரின் பெயா்கள் மீண்டும் சோ்க்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், மனுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட ஏராளமான மனுக்கள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் முடக்கி இருப்பதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மற்ற மனுக்களுடன் சோ்த்து புதிய மனுவும் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.