தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழக பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

தமிழக பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :11 ஏப்ரல் 2026, 12:43 pm IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் இலவசங்களை லஞ்சமாக வழங்கி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் வாக்களர்களுக்கு பணம், நகை, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதாகவும் இது அரசியல் சாசன விதிகளுக்கு மட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளுக்கும் இது எதிரானது என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரான செயல்பாடுகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழகத்தில் பேரவைத் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Petition filed in Supreme Court seeking cancellation of the Tamil Nadu Assembly elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.