தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா்!

நாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தில்லி உள்பட 5 யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்பு

News image

எஸ்ஐஆா்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:17 am IST

நாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தில்லி உள்பட 5 யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் இதுவரை பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்கள், அந்தமான்-நிகோபாா், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் நடைபெற்றுள்ளது. அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த மாதம் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று மே 4-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் அல்லது தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் மொத்தம் சுமாா் 99 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இதில் 60 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி ஏற்கெனவே 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் சுமாா் 39 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி எஸ்ஐஆா் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.