தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!

எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வால், ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரலாம்.

News image

ஏர் இந்தியா விமானம் - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 3:45 pm IST

விமானங்களுக்கான எரிபொருள் விலையை 25 சதவிகிதம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், விமான டிக்கெட்டில் உள்ள எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா உயர்த்தியிருக்கிறது.

ஈரான் மீதான போர் காரணமாக, உலகம் முழுவதும் விமானங்களுக்கான எரிபொருள்கள் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ஏர் இந்தியா விமானங்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணங்களுக்கான விலையில் எரிபொருள் கூடுதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இது பெரும்பலான பாதைகளில் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு ஏப். 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தக் கட்டணமும் மாற்றம் செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும், ஒரே மாதிரியான கட்டண உயர்வு என்று இல்லாமல், தொலைதூரத்துக்கு ஏற்ப கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கட்டண உயர்வானது 299 அமெரிக்க டாலர்கள் முதல் 899 டாலர்கள் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும் பொருந்தும்.

விமான எரிபொருல் விலை உயர்வால், விமான சேவை நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பினை, இந்த எரிபொருள் கூடுதல் கட்டணம் நிவர்த்தி செய்துவிடாது என்றும், நஷ்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. அதேவேளையில், முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான தேதி போன்றவற்றை மாற்றும்போது கட்டண உயர்வை செலுத்த வேண்டியது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச விமானங்களில் சார்க் நாடுகளுக்கான டிக்கெட் விலையில் ரூ.2,200ம், ஐரோப்பா, லண்டன் போன்ற நாடுகளுக்கான டிக்கெட் விலையில் ரூ.20 ஆயிரம் வரையிலும், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கான டிக்கெட் கட்ணத்தில் ரூ.26 ஆயிரமும் கூடுதலாக செலுத்த நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

Summary

Air India ticket prices could rise by up to Rs 25,000 due to the increase in fuel surcharge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.