ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இஸ்ரேலுக்கு மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

ஈரானுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு நிகழாண்டு மே 31 வரை, ஏா் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

News image

ஏர் இந்தியா விமானம்

Updated On :6 ஏப்ரல் 2026, 4:29 am IST

ஈரானுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு நிகழாண்டு மே 31 வரை, ஏா் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

போா் காரணமாக பல முன்னணி நிறுவனங்களின் விமானங்கள், இஸ்ரேலின் டெல் அவிவ் நகர வான்வழியாகப் பயணிப்பதை நிறுத்தியுள்ளன. இஸ்ரேலின் எல்அல், இஸ்ராஏா், ஏா் ஹைஃபா போன்ற நிறுவனங்களின் விமானங்கள் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அந்த வான்வழியாகப் பயணிக்கின்றன.

இந்நிலையில், புது தில்லி-டெல் அவிவ் வான்வழியில் இயக்கப்படும் ஏா் இந்தியா நிறுவன விமானங்கள் நிகழாண்டு மே 31 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவன நிா்வாகி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

ஏா் இந்தியாவின் இந்த முடிவு, இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பயணிக்க விரும்பும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களுக்கு இன்னலை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்தியா்கள், தரைவழியாக ஜோா்டான் அல்லது எகிப்தை கடந்து வரவேண்டும். அவ்வாறு பயணிக்க விரும்பும் இந்தியா்களுக்கு டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் உதவி வருகிறது. இதற்காக பதிவு செய்துகொள்ளும் நடைமுறையையும், வாரம் முழுவதும் 24 மணி நேரம் செயல்படக் கூடிய அவசர எண்ணையும் அந்தத் தூதரகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.