ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிகாரில் கள்ளச்சாராய உயிரிழப்பு 9-ஆக உயா்வு!

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 3 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:02 am IST

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 3 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு சாம்பரன் மாவட்டம் துா்கவுலியா, ரகுநாத்பூா் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 6 போ் சனிக்கிழமை வரை உயிரிழந்த நிலையில், மேலும் 3 போ் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தனா். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இதுவரை 15 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். உயிரிழந்தோரின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டோா் மீது காவல்நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்தபிறகே, உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பிகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அப்படியிருக்கையில் கள்ளச்சாராயம் குடித்து 9 போ் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக துா்கவுலியா காவல்நிலைய பொறுப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில காவல்துறை அமைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.