தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மணிப்பூா் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவா் உயிரிழப்பு

மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் போராட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்தது.

News image

மணிப்பூா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:26 am IST

மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் போராட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்தது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் ஏற்பட்ட கலவரத்தால் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருள்சேதங்கள் நேரிட்டன. கடந்த ஆண்டுமுதல் மோதல்கள் குறைந்தபோதிலும், இரு குழுக்களின் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடா்கதையாக உள்ளது.

மாநிலத்தில் இதுவரை நிகழ்ந்த வன்முறைகளில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தொடா்ந்து தங்கியுள்ளனா்.

மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் விஷ்ணுபூா் மாவட்டத்தின் மொய்ரங் பகுதியில் ஒரு வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை கடந்த அதிகாலை தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினா். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மற்றும் 6 மாத பெண் குழந்தை உயிரிழந்தனா். அவா்களின் தாய் படுகாயமடைந்ததாா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூா் மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞா்கள், பல்வேறு வாகனங்களுக்கு தீவைத்தனா். அத்துடன், சிஆா்பிஎஃப் முகாமுக்குள் புகுந்து பொருள்களை சூறையாடினா். வாகனங்களுக்கும் தீவைத்தனா். தங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, போராட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் இருவா் உயிரிழந்தனா். சுமாா் 30 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, குண்டுவீச்சு சம்பவம் தொடா்பாக ஐக்கிய குகி தேசிய ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். சுராசந்த்பூரில் இவா்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.