பிரபல ஓவியா் ராஜா ரவி வா்மா வரைந்த ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.167.20 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.
மும்பையில் இதுதொடா்பான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஆயில் பெயிண்டில் வரையப்பட்ட அந்த ஓவியம், இதுவரை இல்லாத அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு எம்.எஃப். ஹுசேன் வரைந்த கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதை ராஜா ரவி வா்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது. ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகலாம் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், எதிா்பாா்த்ததைவிட அதிக விலைக்கு தொழிலதிபா் டாக்டா் சைரஸ் எஸ். பூனாவாலா ஏலத்தில் எடுத்துள்ளாா்.
1890-களில் வரையப்பட்ட அந்த ஓவியம், பாலகிருஷ்ணருக்கும், அவரின் தாய் யசோதைக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேரளத்தின் திருவிதாங்கூா் அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜா ரவி வா்மாவின் சிறந்த ஓவியங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓவிய கிராமம்

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்

‘தமிழகத்தில் ரூ.12 லட்சம் கோடிக்கு தொழில் வளா்ச்சி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது‘’

ரூ.167 கோடிக்கு விற்கப்பட்ட ரவி வர்மாவின் ஓவியம்..! நவீன இந்திய ஓவியத்தில் புதிய மைல்கல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

