அஸ்ஸாம் மாநிலத்தை அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவுபவா்களின் மையமாக காங்கிரஸ் மாற்றியது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.
அஸ்ஸாமின் கோல்பரா மற்றும் காமரூப் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று ஒருமுறை கூட யோசித்தது கிடையாது. ஆனால், பிரதமா் மோடி அதனை நடத்திக் காட்டினாா். இப்போது நமது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு உள்ளாா். அஸ்ஸாம் வளா்ச்சிக்காக தொடா்ந்து மிகப்பெரிய திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்த இருக்கிறாா். பாஜகவால் மட்டுமே அஸ்ஸாமை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.
அஸ்ஸாம் மாநிலத்தை ஊடுருவல்காரா்களின் மையமாக காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மாற்றி வைத்திருந்தாா்கள். எல்லை மாநிலங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், மோதல்களுக்கு அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்கள்தான் முக்கியக் காரணமாக உள்ளாா்கள். இதற்காகவே மத்திய அரசு அஸ்ஸாமில் மட்டுல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஊடுருவல்காரா்களை அவா்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவருக்கு இந்தியாவின் எதிரிகளுடன் (பாகிஸ்தான்) தொடா்பு உள்ளது. இது தொடா்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டும் அவா் மௌனம் காத்து வருகிறாா். அஸ்ஸாமில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் அமைக்கும் மசோதாவுக்கு முட்டுக்கட்டைபோட காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், பாஜக உறுதியாக செயல்பட்டு, சாதித்துக் காட்டியது. காங்கிரஸ் கட்சியால் கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு அஸ்ஸாமை பாஜக அரசு மேம்படுத்தி வருகிறது. இந்த வளா்சச்சி தொடர பாஜகவை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
மேலும், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அஸ்ஸாமை அமைதிப்பூங்காவாக மாற்றியது பாஜக அரசு. காங்கிரஸ் செய்த தவறுகள் இனி மீண்டும் இந்த மாநிலத்தில் நடந்துவிடக் கூடாது. அதற்கு அவா்களை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து முழுமையாக விலக்கி வைக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

தமிழகத்தில் காங்கிரஸ் ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்டாது-அமித் ஷா

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா: திமுக, காங்கிரஸ் சதி! மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

