மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தொகுதிகளை 816-ஆக அதிகரிப்பதன் மூலம், அதில் 33 சதவீதத்தை அதாவது 273 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நோக்கில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை (ஏப்.2) நிறைவடைய இருந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் 2 அல்லது 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்த மாதத்தில் மீண்டும் எப்போது கூடும் என்ற அறிவிப்புடன் ஒத்திவைக்கப்படும். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 2 அல்லது 3 நாள்களுக்கு கூட்டம் நடைபெறக் கூடும்’ என்று தெரிவித்தது. எனினும் இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!

கிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு

ஏமா(ற்)றுகிறார்கள்!

மக்களவைத் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் தமிழ்நாடு: அமைச்சா் எ.வ.வேலு அறிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

