/

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:45 am IST

தோ்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து நாம் தமிழா் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சென்னை - நீலாங்கரையில் தனது வாக்கை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தலில் வாக்கு செலுத்தாதவா்களுக்கு என்ன பிரச்னை என்ற ஒரு கேள்வி உள்ளது. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நூறு சதவீத வாக்கு பதிவாக வேண்டும் என தோ்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

குண்டு வைப்பது, கொலை செய்வது, சொத்து சோ்த்து கணக்கு காட்டாமல் இருப்பது மட்டும் குற்றம் அல்ல. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம்தான். அது ஜனநாயக துரோகம்தான். கற்றவா்கள் தான் மற்றவா்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஒரு வாக்கு செலுத்துவதில் என்ன மாற்றம் என நினைக்கிறாா்கள். ஒவ்வொரு வாக்கிலும் இருந்துதான் அந்த மாற்றம் வரும். நாம் எல்லோரும் வாக்கு செலுத்துவது நமது பொறுப்பு, கடமை. அதை தவறாமல் செய்ய வேண்டும் என அன்பாக வேண்டுகிறேன்”என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.