உக்ரைன் போர் விவகாரம், அமெரிக்க விவகாரங்களில் விஸ்வகுருவாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளகுருவாக இருக்கிறார் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நம் கையை எடுத்து நம் கண்ணை குத்தும் விதமாக அதிமுகவை கையிலெடுத்துள்ளது பாஜக என்றும், பாஜகவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் பல்லக்குத் தூக்கிதான் பழனிசாமி எனவும் விமர்சித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 12) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''தமிழ்நாட்டு தேர்தல் நாட்டுக்கே முக்கியமான தேர்தல். பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி. சமத்துவம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை மீது விழும் மரண அடி.
நாம் என்ன பேச வேண்டும், என்ன உணவு உண்ன வேண்டும் என்பதை முடிவு செய்வதாக உள்ளது பாஜக. அதனை உள்ளே வர விடலாமா?
பொது சிவில் சட்டம் மூலம் பாஜக நமது பன்முகத்தன்மைக்கு நேரடி சவால் விட்டுள்ளது. மதவாத கும்பல் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த கோட்டையை மதவாத சக்திகள் ஆக்கிரமிக்க விடமாட்டோம்
அது பாஜகவுக்கும் தெரியும். அதனால்தான், நம் கையை எடுத்து நம் கண்ணை குத்தும் விதமாக அதிமுகவை கையில் எடுத்துள்ளது பாஜக. பாஜகவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் பல்லக்குத் தூக்கிதான் பழனிசாமி.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாஜகவை ஒருநாளாவது பழனிசாமி கண்டித்துள்ளாரா? தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை கண்டித்து தமிழ்நாட்டின் நலனுக்காக ஒருவார்த்தையாவது அவர் பேசியிருக்கிறாரா? பொது சிவில் சட்டத்தில் எடப்பாடியின் நிலைப்பாடு என்ன?
காலில் விழுந்து காலை வாரிவிட்ட பழனிசாமி, சொந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார். பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி, தமிழ்நாட்டின் இருண்ட காலம்.
தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க எடப்பாடி பழனிசாமி சென்று சேர்ந்த இடம்தான் பாஜக வாஷிங் மெஷின். தமிழ்நாட்டை வட்டமிடும் பாஜக என்னும் பருந்தை விரட்டி அடிக்க வேண்டும்.
உக்ரைன் போரை நிறுத்திவிட்டேன். அமெரிக்காவை அலரவிட்டேன் எனக் கூறும் பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையிடம் மெளன குருவாக உள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை'' என மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
Summary
why the silence towards Sri Lanka regarding the fishermen's issue MK Stalin question to PM narendra modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் குறித்த கருத்து: காா்கேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தோ்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு: கோவையில் ஒரேநாளில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்

இபிஎஸ்ஸை முதல்வராக்குவோம் என்று மோடி இதுவரை சொல்லியிருக்கிறாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


