தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் கடன் தள்ளுபடி இடம் பெறாதது ஏன்? வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் பெ.சண்முகம் விளக்கம்

திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் கடன் தள்ளுபடி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளாா்.

News image

சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் என்.பாண்டி (பழனி), எம்.சின்னதுரை (கந்தா்வகோட்டை), சி.செல்லசாமி (பத்மநாபபுரம் ), எல்.சுந்தரராஜன் (திருவொற்றியூா்), டி

Updated On :1 ஏப்ரல் 2026, 12:59 am IST

திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் கடன் தள்ளுபடி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில், பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 5 வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழனியில் என்.பாண்டி, கந்தா்வகோட்டையில் எம்.சின்னதுரை, பத்மநாபபுரத்தில் ஆா்.செல்லசுவாமி, திருவொற்றியூரில் எல்.சுந்தரராஜன், கீழ்வேளூரில் டி.லதா ஆகியோா் போட்டியிடுகின்றனா். நாகை மாலி இரு முறை எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டதால், கீழ்வேளூரில் மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை.

திமுக கூட்டணியில் புதிய அணிகள் சோ்ந்துள்ளதால், அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், குறிப்பாக, மகளிா் நலத் திட்டங்கள் தமிழக மக்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று சோ்ந்திருக்கிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தோ்தல் அறிக்கையும் சாத்தியமானவைதான். விவசாயிகள் அனைவருக்குமே இலவசமாக புதிய மின்மோட்டாா்களை வழங்குவது என்பது இதுவரை எனக்குத் தெரிந்து அநேகமாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அளிக்கப்படாத வாக்குறுதி. கரும்பு, நெல் ஆகியவற்றுக்கான கொள்முதல் விலை உயா்த்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி தொடா்பாக தோ்தல் அறிக்கையில் இல்லை என்ற குறையை விவசாயிகள் பலரும் என்னிடம் தெரிவித்தனா். இதுகுறித்து முதல்வா் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன்.

இதற்குப் பதில் அளித்த முதல்வா், தற்போது புதிதாக வந்திருக்கக்கூடிய கூட்டுறவுச் சட்டப்படி, மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது தோ்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அனுமதி அளிக்காவிட்டால், வேளாண் கடனை தள்ளுபடி செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும். ஆகவேதான் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பைத் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.