விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியனின் தமமுக!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ராஜபாளையம் (பொது) தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிப்பு...

News image

தமமுக தலைவர் ஜான் பாண்டியன் - (கோப்புப் படம்)

Updated On :28 மார்ச் 2026, 2:03 pm IST

அதிமுக கூட்டணியில் ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராஜபாளையத்தில் தமமுக பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும், என அக்கட்சியின் தரப்பில் சனிக்கிழமை (மார்ச் 28) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமமுக சார்பில் ராஜபாளையத்தில் ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamizhaga Makkal Munnetra Kazhagam will contest in Rajapalayam under the lotus symbol.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.