தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக சின்னமும் மதிமுக வேட்பாளரும்!

திமுக சின்னமும் மதிமுக வேட்பாளரும்!

News image

கருணாநிதி, வைகோ

Updated On :22 மார்ச் 2026, 3:56 am IST

தென்காசி பேரவைத் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதிமுக வேட்பாளருக்கு திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்த சம்பவம் நடைபெற்றது.

வழக்கமாக தேர்தலின்போது, பிரதான கட்சி வேட்பாளரின் பெயரைக் கொண்ட பலரும் வேட்புமனு தாக்கல் செய்து குளறுபடிகளை ஏற்படுத்துவது சுவாரஸ்யமாக இருக்கும். அதுபோன்று சம்பவம்தான் தென்காசி தொகுதியிலும் 2006-ஆம் ஆண்டு நடைபெற்றது.

இங்கு திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் அப்போதைய மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக சார்பில் இராம உதயசூரியன் பம்பரம் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இதனால், வீ. கருப்பசாமிபாண்டியன் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் மேற்கொண்டபோது, அவரது கட்சியின் சின்னத்தை மட்டுமன்றி எதிர்க்கட்சி வேட்பாளரையும் குறிப்பதாக இருந்தது. அந்தத் தேர்தலில் வீ.கருப்பசாமிபாண்டியன் 69,755 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இராம. உதயசூரியன் 51,097 வாக்குகள் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.