திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மதிமுக அறிவிக்கப்பட்டுள்ளதால், உதயசூரியன் சின்னம் 176 இடங்களில் போட்டியிடுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக, ஐயூஎம்எல், மக்கள் நீதி மய்யம் (மநீம) உள்பட 20-க்கும் மேற்ப்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டது.
ஏற்கெனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறையைவிட காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஐயூஎம்எல் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.
மேலும், கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் 3 உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர், சீர்காழி ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சீர்காழியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ இன்று அறிவித்தார்.
இதன்மூலம், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
Summary
Since it has been announced that the MDMK will contest under the 'Rising Sun' symbol in all four constituencies allotted to it within the DMK alliance, the 'Rising Sun' symbol is contesting in 176 seats.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலை!

திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸுக்கு விருப்பமில்லை: கே. அண்ணாமலை

4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!

உதயசூரியனில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள்! 11 தொகுதிகள் எவை?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


