மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவையிலும், ராகுல் காந்தி பொன்னேரியிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதைப் பற்றி...

News image

நரேந்திர மோடி / ராகுல் காந்தி - படம்: பிடிஐ.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:29 pm IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்லுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை கோவை மற்றும் பொன்னேரியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநில கட்சிகளைத் தவிர்த்து தமிழ்நாடு தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் சாலை வலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

பாஜக சார்பில் தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நாளை(ஏப். 18) தமிழகம் வரும் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

ஒருபுறம் ராகுல் வருகைக்கு மத்தியில் பிரதமர் மோடி நாளை கோவைக்கு வருகை தரவுள்ளார். கோவை கொடீசியா திடலில் நாளை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் வருகையால் தேசியக் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Summary

As the date for the Legislative Assembly elections in Tamil Nadu draws near, Prime Minister Narendra Modi and the Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, are set to campaign tomorrow in Coimbatore and Ponneri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.