மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார்.

News image

விஜய்.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:05 pm IST

சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார்.

தவெக தேர்தல் பணிமனைக்கு இன்று சென்ற நிலையில் அருகில் இருந்த வீட்டுக்குச் சென்று வாக்கு சேகரித்தார். மேலும் பெரம்பூரில் உள்ள பணிமனை அலுவலகத்தில் தொகுதி வளர்ச்சி குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

ஏற்கெனவே பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்த விஜய், இன்று மீண்டும் வாக்கு சேகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாள்கள் மட்டும் உள்ளதால் அரசியல் தலைவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலில் புதுவரவான தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. அதன் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தேர்தலையொட்டி விஜய்யும், தனது கட்சி வேட்பாளர்ளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

Story image

Summary

TVK leader Vijay went door to door in Chennai's Perambur constituency to collect votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.