மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்

திமுக ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக துணை முதல்வர் பேசியது பற்றி...

News image

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் - ANI

Updated On :15 ஏப்ரல் 2026, 11:00 am IST

தமிழ்நாட்டில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்டப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

திமுக தலைமையில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று டி.கே. சிவக்குமார் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்கின்றன. அனைவரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு மிகச் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளது. மக்களின் நலனுக்காக நாங்கள் பல்வேறு சிறந்த வாக்குறுதிகளையும் நலத்திட்டங்களையும் வழங்கியுள்ளோம்.

தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. மத்திய அரசின் கொள்கையால் சாமானிய மக்களின் வருமானம் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ், இத் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒன்றாக அமையும் என்றே நான் கருதுகிறேன். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பிறகு, அனைவரையும் அழைத்து விவாதிக்க வேண்டும். இது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பலனளிக்கக் கூடிய மசோதா அல்ல, நாட்டின் பெண்களுக்கு உதவும் மசோதா.” எனத் தெரிவித்தார்.

Summary

DMK will form the government with a two-thirds majority! — D.K. Shivakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.