கோவை: கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை சந்திக்காமல் அக்கட்சியின் வேட்பாளர்கள் புறக்கணித்த நிலையில், திமுகவுக்கு மட்டும் அவர் பிரசார செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதியும், கவுண்டம்பாளையம் தொகுதியில் சூரிய பிரகாஷும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கோவைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த முன்னாள் மத்திய அமைச்சடும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கும், சூலூரில் திமுக வேட்பாளர் தளபதி முருகேஷனுக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் போட்டியிடும் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் ப. சிதம்பரம் பிரசாரம் செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சார்பில் பிரசாரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாலும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததாலும் அவர் பிரசாரம் செய்யவில்லை என்று கட்சியின் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை மரியாதை நிமித்தமாககூட வேட்பாளர்கள் இருவரும் சந்திக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், நேற்று பிற்பகல் கோவை வந்த ப. சிதம்பரம் பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை ஹோட்டலில்தான் இருந்தார். இரண்டு இளம் வேட்பாளர்களும் மூத்த தலைவரை சந்திக்காதது தவறான போக்கு. அவர் இன்றும் கோவையில்தான் உள்ளார். அவர் புறப்படுவதற்குள் வேட்பாளர்கள் சந்தித்தால், மூத்த நிர்வாகிகள் அவர்களுக்கு ஆதரவாக பணியாற்ற வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
Summary
Congress Candidates Boycotted! P. Chidambaram Campaigns Exclusively for DMK in Coimbatore!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ஆளுநர் மாளிகை அல்ல! காங்கிரஸ்

சிதம்பரம்: திருமணக் கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்!

தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கும் திமுக அரசு மீண்டும் அமையும்! ப. சிதம்பரம்

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

