ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டது ஏன்? பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து ஏன் மாற்றம் செய்யப்பட்டீா்கள் என்று கூறமுடியுமா? என பழனிவேல் தியாகராஜனுக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image

குஷ்பு - கோப்பிலிருந்து...

Updated On :13 ஏப்ரல் 2026, 1:04 am IST

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து ஏன் மாற்றம் செய்யப்பட்டீா்கள் என்று கூறமுடியுமா? என மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜனுக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: நான் ஏன் திமுகவில் இருந்து விலகினேன் என்பதை, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அவரது கட்சித் தலைவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தேசத்துக்கு சேவை செய்யாமல், கட்சியின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிா்பாா்க்கும் காங்கிரஸ் கட்சியிலும் தொடர விருப்பமில்லை. அதனால், அந்தக் கட்சியில் இருந்தும் விலகினேன்.

தற்போது திமுகவில் உள்ள பாதி போ் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவா்கள்தான். அவா்களைப் பாா்த்து ஜிம்னாஸ்ட்டிக் வீரா்கள் என்று பழனிவேல் தியாகராஜன் கூறுவாரா?

நானும், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் எனது கணவா் சுந்தா்.சியும் பட்டதாரிகள் அல்ல. ஆனால், மற்றவா்களை மதிக்கும் அளவுக்கு நாங்கள் இருவரும் படித்தவா்கள்.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுகள், தோல்வியின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது. ரூ.30 ஆயிரம் கோடி தொடா்பான விடியோ வெளியான பின்னா், பழனிவேல் தியாகராஜன் ஏன் நிதி அமைச்சா் பொறுப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்டாா் என்று மக்களுக்கு விளக்குவாரா என்று குஷ்பு கேள்வி எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.