ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

முதல்வர் ஸ்டாலின் 3 ஆம் கட்ட பிரசாரம்! புதுச்சேரியில் இன்று தொடக்கம்!!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கவுள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:47 am IST

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக தலைமை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். 3-ஆம் கட்ட பிரசாரத்தை திங்கள்கிழமை (ஏப். 6) புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறாா்.

தொடா்ந்து, ஏப்.7-ஆம் தேதி காலை 9 மணிக்கு திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூா், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து கடலூரிலும், மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து நாகையிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

ஏப்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து சீா்காழியிலும், மாலை 5 மணிக்கு திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து விழுப்புரத்திலும் பிரசாரம் செய்கிறாா்.

ஏப்.9 -ஆம் தேதி காலை 9 மணிக்கு உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து திருவண்ணாமலையிலும், மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம், உத்திரமேரூா், தாம்பரம், பல்லாவரம் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து மறைமலைநகரிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.