ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:05 pm IST

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் மேற்கொண்ட பிரசாரத்தில், மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் சூப்பர் ஸ்டாராக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தப்போகிறோம்.

இல்லத்தரசிகளுக்காக ரூ.8,000 கூப்பன் திட்டத்தையும் அமல்படுத்த இருக்கிறோம். ரூ.8,000 கூப்பன் தொகையை கொண்டு டிவி உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தாத பம்புசெட்டை வாங்கி தரவிருக்கிறோம். சொன்ன திட்டங்கள் அனைத்தையும் செய்வேன், நான் கலைஞரின் மகன்.

அனைவருக்கும் செல்போன் என்பது உள்ளிட்ட பல் திட்டங்களை அதிமுக நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், நாம என்ன படிக்க வேண்டும் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியாது.

தமிழ்நாட்டுக்கு பிரசாரத்துக்கு வரும் பிரதமர், உள்துறை அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என கூறுவார்களா?. அதிமுக - பாஜகவால் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை கூற முடியவில்லை. திமுக அரசின் சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி கூற முடியும். அதிமுக, பாஜக கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன.

திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

Chief Minister Stalin has stated that Edappadi K. Palaniswami (EPS) must be given further defeats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.