கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி. மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளேன் என காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கேரளம் உள்பட தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக, கேரளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தையும் வாக்கு சேகரிப்பையும் தொடங்கியுள்ளன. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
இந்த நிலையில் கேரளம், பாலக்காடு மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "நான் பாஜகவுக்கு எதிராக போராடுகிறேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். அமலாக்கத் துறையால் 55 மணி நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன். பிறகு, ஜாமீனில் வெளிவந்தேன்.
எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் பாஜகவின் ஊடகப் பிரிவு ஆகியவற்றின் முக்கிய இலக்காக நான் இருந்தேன். பாஜக, கேரள முதல்வரைக் குறி வைக்ககாதது ஏன்? அவரிடமும் அவருடைய குடும்பத்தினரிடமும் எந்தவித விசாரணையையும் நடத்தாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம், ஏப்ரல் 7, 2026 அன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Congress MP and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, stated that he has undertaken a 4,000-kilometer walking journey from Kanyakumari to Kashmir.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதாவும், மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
காமராஜர், திமுக அரசின் திட்டங்கள் பற்றிப் பேசிய ராகுல் காந்தி!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
பொன்னேரியில் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடாத ராகுல்! பெரியார் பற்றிப் புகழாரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

