பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் படம் குறித்து...

News image

ராகவா லாரன்ஸ்

Updated On :19 மே 2026, 5:14 pm IST

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக இருந்து நடிகராகி தற்போது படங்களை இயக்கியும் வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2011 இல் வெளியான காஞ்சனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் எடுக்கப்பட்டன. தற்போது, ராகவேந்திரா புரடக்‌ஷன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 உருவாகி வருகிறது.

இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நோரா ஃபதேகி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதில், பேய் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளாராம்.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ஹாரர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிமான்டி காலனி - 3 படத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து அப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் இணைவார் எனத் தெரிகிறது.

Reports suggest that actor Raghava Lawrence is set to star in a film directed by Ajay Gnanamuthu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.