/

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியைப் பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

தெலுங்கு நடிகர் தனிகெல்லா பரணியின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருவது குறித்து...

News image

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் தனிகெல்லா பரணி - எக்ஸ்

Updated On :11 மே 2026, 7:17 pm IST

பகவான் ராமரையும், கிருஷ்ணரையும், விவேகானந்தரையும் பார்த்ததில்லை என்றும் அதற்கு பதிலாக அவர்களின் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பார்ப்பதாக தெலுங்கு நடிகர் தனிகெல்லா பரணி தெரிவித்துள்ளார்.

வாழும் காலத்தில் பிரதமர் மோடியை பார்ப்பதை பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் தனிகெல்லா பரணி.

தமிழில் 180, தோழா, கம்பீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளா. தமிழில் வெளியாகும் தெலுங்கு டப்பிங் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர்.

இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் பரணி சந்தித்துள்ளார். ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய இவர், மோடியுடன் சில நிமிடங்கள் பேசியுள்ளார்.

பின்னர் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரணி பகிர்ந்துள்ளதாவது:

"நான் ராமரைப் பார்த்ததில்லை; கிருஷ்ணனைப் பார்த்ததில்லை; ஆதி சங்கரரைப் பார்த்ததில்லை; விவேகானந்தரைப் பார்த்ததில்லை. சொல்லப் போனால், இப்போதும் நம்மால் அவர்களைக் காண இயலாது.

ஆனால், அவர்கள் அனைவரின் சாராம்சத்தையும் தன்னுள் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை நான் கண்டிருக்கிறேன். அவருடன் செலவிட்ட நேரங்கள் மறக்க முடியாதவை. என் வாழ்வு பூரணமடைந்தது" என்று பரணி குறிப்பிட்டார். இவரின் இந்த பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

I have not seen Ram, Krishna but I have seen PM Narendra Modi Telugu actor Tanikella Bharani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.