மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் அனுஷ்கா சர்மா?

அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் அனுஷ்கா சர்மா...

News image

அனுஷ்கா சர்மா

Updated On :24 மார்ச் 2026, 4:05 pm IST

நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சர்மா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.

நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசர் வருகிற ஏப். 8 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த டீசரை பார்த்த பிரபலங்கள் பலரும் ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா இறுதியாக ஷாருக்கானுடன் ஜீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியவர் 8 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

reports suggest actor anushka sharma might act in atlee and allu arjun movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.