மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காளிதாஸ் - 2 மிக நல்ல கிரைம் திரில்லர்: பா. இரஞ்சித்

காளிதாஸ் - 2 குறித்து பா. இரஞ்சித்...

News image

பா. இரஞ்சித்

Updated On :22 மார்ச் 2026, 1:31 pm IST

இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் பரத்தின் காளிதாஸ் - 2 திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் பரத் காளிதாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான இப்பாகத்திலும் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக பரத் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்கள் அஜய் கார்த்திக், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், “காளிதாஸ் - 2 திரைப்படத்தைப் பார்த்தேன். இது மிக நல்ல கிரைம் திரைல்லர். கண்டிப்பாக கிரைம் திரில்லர் ரசிகர்கள் விரும்புவார்கள். அண்மை காலமாக தமிழ் சினிமாவில் சிறிய திரைப்படங்கள் நல்ல வணிகத்தைச் செய்கின்றன. உதாரணம், சிறை. காளிதாஸ் - 2 திரைப்படமும் இந்த பலங்களுடனே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

director pa. ranjith appreciates actor bharath's kalidas 2 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.