ஜாதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மன்னிப்புக் கேட்டு பதிவிட்டுள்ளார்.
நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு மொழிப்படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் தனனுடைய ஜாதியை வெளிப்படையாக கூறிய விடியோ, சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில், ”சத்தியமாக சொல்கிறேன், எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி…. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.
அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை.
என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறைகூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன்.
தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Director and actor Parthiban has posted an apology for his controversial comment on caste.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்தின் பெயரை மாற்றாதது ஏன்? ஆதிதிராவிடா் ஆணையத் தலைவா் விளக்கம் கேட்டு குறிப்பாணை!
திமுகவால் நல்லாட்சி அளிக்க முடியாது - சரத்குமாா்

இயக்குநர் பாரதிராஜாவின் நிலைமை என்ன?

எம்ஜிஆர் பற்றிய அவதூறு: மன்னிப்புக் கேட்ட ராஜேந்திர பிரசாத்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


