தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தாய் கிழவி - இந்தக் காட்சியை ஏன் நீக்கினர்?

தாய் கிழவியின் நீக்கப்பட்ட காட்சி குறித்து...

News image

நடிகர்கள் அருள் தாஸ், பால சரவணன், சிங்கம் புலி

Updated On :17 மார்ச் 2026, 1:23 pm IST

தாய் கிழவி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது தாய் கிழவி திரைப்படம்.

நீண்ட நாள் கழித்து கிராம வாழ்க்கையைப் பதிவு செய்த வகையிலும் கவனம் பெற்றதால் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், நீக்கப்பட்ட காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் அருள்தாஸ் தன் தாயான பவுனுத்தாய் குறித்து பால சரவணனிடம் பேசும் காட்சி மிக உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டிருந்தது.

வசனங்களுடன் அருள் தாஸின் நடிப்பும் நன்றாக இருந்ததால் ரசிகர்கள் பலரும் இப்படியொரு காட்சியை ஏன் நீக்கினார்கள்? எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Summary

actor radhika sarathkumar's thaai kizhavi deleted scene viral on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.